சென்னை, அக். 6 பசுவின் பெயரால் நாடெங்கும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையைக் கட்டு ப்படுத்தக் கோரி இயக்குனர் மணிரத்தினம், வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கூட்டாக பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கான அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை கைவிடக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெ ழுத்து பெற்று பிரதமரிடம் அளிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் உள்ளிட்ட எவருக்கும் இந்திய நாட்டு குடிமக்கள் எவரும் கடிதம் எழுதுவதற்கு உரிமை உள்ளது.இந்த கருத்துரிமையை நீதித்துறை யைப் பயன்படுத்தியே பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்ப தாகும் என்று அக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.